குடும்ப ஆன்மீக பணி பயிற்சி.
- - - - -
இல்லம்தோறும் அருள் ஆட்சியை விதைப்போம்.
- - - - -
நாம் புறப்பட்டுப் போக அழைக்கப்பட்டவர்கள்.
லூக்கா 10:3
புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.
திருத்தூதர் பணிகள் 1:8
ஆனால், தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
எருசலேம் என்பதை எமது இல்லத்தில் முதலில் ஆரம்பிப்பதாக கருதலாம்.
பாடம் ஒன்று
பரிசுத்த வேதாகமம்:
1. பரிசுத்த வேதாகமம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
2. பழைய ஏற்பாடு நூலை யார் பயன்படுத்துகிறார்கள்?
3. புதிய ஏற்பாடு நூலை யார் பயன்படுத்துகிறார்கள்?
4. பழைய ஏற்பாட்டு நூல் எதைக் கூறுகின்றது?
5. புதிய ஏற்பாட்டு நூல் எதைக் கூறுகின்றது?
6. பழைய ஏற்பாடு எத்தனை புத்தகங்களைக் கொண்டது?
7. பழைய ஏற்பாட்டு 46 நூல்களையும் எத்தனை பிரிவுகளில் அடக்கலாம்?
8. திருவிவிலியம் எழுதப்பட்ட காலத்தில் ஆசிரியர்கள் தம் நூல்களை அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரித்து எழுதினார்களா?
9. திருவிவிலிய நூல்கள் எவ்வாறு திருவிவிலியமாக உருவாகியது?
10. திரு விவிலியத்தில் ழுதலில் தோன்றிய நூல் எதுவாக கருதப்படுகின்றது?
11. திருவிவிலியம் முதலில் எதில் எழுதப்பட்டது?
12. பரிசுத்த வேதாகமம் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
13. திரு விவிலியம் தொடக்கத்தில் எல்லோரும் வாசிப்பதற்கு கொடுக்கப்பட்டதா?
14. இறைவார்த்தை எம்முறைகளில் விளக்கிக் கூறப்பட்டது?
15. இறைவார்த்தையின் ஆசிரியர் யார்?
16. இறைவாக்கினர்கள் இறைவாக்குரைக்கும் போது அவர்கள் சமூகச் சூழலுக்குள் இருந்து அறிவித்தார்களா?
17. இறைவார்த்தைக்கு கலாச்சார, மொழி, பாரம்பரியம் இருக்கின்றதா?
18. திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்பட்ட பின் எவ்வாறு இறைவார்த்தை அளிக்கும் விளக்கம் புரிந்துகொள்ளப்படுகின்றது?
19. திருச்சபையில் யார் இறைவார்த்தைக்கு விளக்கம்தர அனுமதிக்கப் படுகிறார்கள்?
20. செபவழிபாட்டில் இறைவார்த்தைக்கு பொதுநிலையினர் விளக்கம் தருவது முறையா?
21. மறுமலர்ச்சி மக்களின் வேதாகமத்தைப் பற்றிய புரிந்துணர்வு எவ்வகையானது?